கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது

0 2345

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓயூரில் கடந்த 27ஆம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டாள்.

மறுநாள் அந்த சிறுமியை கொல்லம் அருகே உள்ள ஆசிரம மைதானத்தில்  விட்டு விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. 

இந்த நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை  மைதானத்திற்கு முன்பாக இறக்கி விட்ட ஆட்டோவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

 மேலும் சிசிடிவி உதவியுடன் தென்காசி மாவட்டம் புளியரையில் 3 பேரை கைது செய்த போலீசார், எந்த நோக்கத்திற்காக சிறுமியை  கடத்தினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments