அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்தியர் மீது வழக்கு பதிவு

0 1191

அமெரிக்காவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அங்குள்ள இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து, இந்திய அதிகாரியை தொடர்புப்படுத்தி விசாரணை நடத்துவது கவலைக்குரிய விஷயம் என்று இந்தியா கூறியுள்ளது.

டெல்லியில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்தியா பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு முரணாக அமெரிக்கா செயல்படுவதை அந்நாட்டிடம் சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாக அரிந்தம் பாக்சி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments