ஆப்கான் தூதரகம் இந்தியாவில் மீண்டும் திறக்க உள்ளதாக அறிவிப்பு

0 776

இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதரபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே நல்ல நட்புறவை ஏற்படுத்தும் விதமாகவும் இங்கு உள்ள ஆப்கானிய மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும் தூதரகம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக தகுந்த  அதிகாரிகளால் ஆப்கானிய தூதரகம் நிர்வகிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஆப்கானியர்களுக்கான விசா காலத்தை இந்தியா நீட்டித்தால் மாணவர்கள், நோயளிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று இந்தியாவில் உள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments