கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு

0 9795

கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் தேதி இக்கடையின் ஏசி வெண்ட்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன் நகைகளை கொள்ளையடித்து, மூட்டை கட்டிக்கொண்டு சாவகசமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன.

தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கொள்ளையன் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்து விஜயகுமார் தப்பியோடி தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில்,  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவனது தாயாரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments