சேலம் வாழப்பாடியில் மினி சரக்கு வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி 3 பேர் பலி

0 1216

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மினி சரக்கு வாகனம் மீது கன்ட்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் , வாழப்பாடி பிரிவு சாலையில் திரும்பியபோது பின்னால் வந்த லாரி மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் பிரவீன்குமாரும் அதில் பயணித்த சுதர்சனம், பிரகாஷ் ஆகியோரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments