நியூ யார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக இந்தியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு..!

0 2180

நியூ யார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக இந்தியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிகில் குப்தா என்பவர் காலிஸ்தான் பிரிவினைவாதியும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குருபத்வன்த் சிங் பன்னுன் என்பவரை நியூயார்க்கில் கொல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நவம்பர் 20ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளரான பன்னுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க மண்ணில் குடியுரிமை பெற்ற ஒருவரைக் கொல்ல முயன்றது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இது தொடர்பாக இந்தியாவின் மிகவும் உயர்மட்ட அளவில் புகார் எழுப்பப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments