காணாமல் போய் 25 நாட்களாகியும் குழந்தைகளை குறித்து எந்த தகவல்களும் கிடைக்கத்தால் தாய் தர்ணா போரட்டம்

0 1830

காணாமல் போன 2 மகன்கள் குறித்து இருபத்தைந்து நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோடி முனை பகுதியைச் சேர்ந்த ராஜத்தை கடந்த 4 ஆம் தேதி குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு அவரது 16 வயது மகன் ரித்திக்ரோஷன், 9 வயது மகன் ஆதவன் ஆகியோர் பேருந்து ஏற்றி விட்ட பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து குளச்சல் போலீஸில் புகார் அளித்த நிலையில், தனது மகன்கள் இருவரும் கடலில் விழுந்து இறந்து விட்டதாகவும், அவர்கள் உடல் பாறையில் சிக்கி உள்ளதாகவும் போலீஸார் கூறுவதாக ராஜம் தெரிவித்தார்.

பாறையில் சிக்கிய சடலத்தையாவது மீட்டுத்தாருங்கள் எனக் கேட்டாலும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி ராஜம் தர்ணாவில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments