மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற மாற்றுத் திறனாளி மாணவர்களை வழியனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்

0 1059

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்காக வாங்கப்பட்டுள்ள சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகளில் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

பேருந்துகளுக்குள் சென்று பார்வையிட்ட முதலமைச்சர்  மாணவ, மாணவியருடன் உரையாடியதுடன், அவர்களுக்கு இனிப்புகள் கொண்ட பைகளையும் வழங்கினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அருகே நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments