அமெரிக்காவில், தமது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்திய மாணவரை போலீசார் கைது

0 1018

அமெரிக்காவில், தமது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பட்  கடந்த 2 மாதங்களாக நியூஜெர்சி மாநிலத்தில் வசித்துவந்த தமது தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து வசித்துவந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஓம் பிரம்பட், தனது தாத்தா, பாட்டி மற்றும் மாமாவை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

அவர் ஆன்லைனில் கைத்துப்பாக்கியை வாங்கியுள்ளதாக தெரிவித்த போலீசார் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments