மதுரையில் பீகார் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்று வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கும்பலுக்கு போலீஸார் வலை

0 2441

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, செல்ஃபோனை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கூத்தியார் கூண்டு பகுதியில் உள்ள மளிகைக்கடையில் பொருட்களை வாங்கிச் சென்ற பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுபாஷ்குமார் மற்றும் சன்னியை அவ்வழியாக பைக்கில் வந்த கும்பல் வழிமறித்து செல்ஃபோனை பறித்தபோது இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், பைக் கும்பல் கத்தியால் இருவரையும் குத்தியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த சுபேஷ்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், சன்னியை போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments