எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0 857

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை போலியாக வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கே.சி. பழனிச்சாமிக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து கூறியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி. பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இ.பி.எஸ். தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

அவற்றை இ.பி.எஸ். தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்துமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments