வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகை

0 1622

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.

பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு நாட்டைச்சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பறவைகள் இதுவரை சரணலாயத்திற்கு வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் கடைசி வாரத்தில் ஆஸ்திரேலியா, சைபிரியா ,பாகிஸ்தான், பங்களாதேஷ் , இலங்கை உள்ளிட்ட பல்வேறு அயல் நாடுகளில் இருந்து கூழைக்கடா, அரிவாள் மூக்கன் ,வர்ண நாரை, மிளிர் உடல் அரிவாள், மூக்கன் பாம்பு, தாரா சாம்பல் நிற கொக்கு, நத்தக்குத்தி நாரை, கரண்டி வாயன், குருட்டு கொக்கு, வக்கா, உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் மே.

ஜூன் மாதங்களில் தங்கள் நாட்டுக்கு திரும்பி விடுவது வழக்கம் மேலும் மழை தொடர்ந்தால் விரைவில் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments