தமிழகத்தில் ஏழை என்கிற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க தயார் - அண்ணாமலை

0 3800
தமிழகத்தில் ஏழை என்கிற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க தயார் - அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஏழை என்கின்ற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய அவர், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அநியாயம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதாகவும், குறிப்பாக டாஸ்மாக் மூலம் அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருமானம் வருவதாகவும், தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்என்றும் கூறினார்.

தமிழக முதலமைச்சர் ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments