குஜராத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு... மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழப்பு

0 1074

குஜராத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் உள்ள குஜராத்தில் உள்ள 251 தாலுகாக்களில் 220 தாலுகாக்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சவுராஷ்டிராவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் காணப்பட்டது. இந்த நிலையில் தஹோடில், பருச், சூரத், துவாரகா என மாநிலத்தின் பல்வேறு பகுதியில், இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சௌராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான ஆலங்கட்டி மழையும் பதிவாகியுள்ளது, பார்வைக்கு அந்தப் பகுதிகள் பனி மூடிய நிலப்பரப்பு போல காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments