கிரீஸ் கடும் புயல் காற்று காரணமாக கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் 4 இந்தியர்கள் உள்பட 13 பேரை தேடுதல் பணிகள் தீவிரம்

0 1302

கிரீஸ் கடற்பகுதியில் உள்ள தீவு அருகே சரக்குக் கப்பல் புயலால் திசைமாறி கடலில்  மூழ்கியது. அந்தக் கப்பலில் 4 இந்தியர்கள் உட்பட 14 பேர் இருந்ததாகவும் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கிரீஸ் நாட்டு கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

கடலில் மூழ்கிய 13 பேரைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்களும் கப்பல்களும் செலுத்தப்பட்டுள்ளன. சுமார் 6 ஆயிரம் டன் உப்பை ஏற்றிக் கொண்டு அந்தக் கப்பல் எகிப்து அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு சென்றுக் கொண்டு இருந்தபோது லெஸ்போஸ் தீவு அருகில் அதன்  தொடர்பு துண்டிக்கப்பட்டது.

எகிப்தை சேர்ந்த ஒருவர் மட்டும் நீந்தி வந்து உயிர்தப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments