விபத்தில் சிக்கியதில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடலுறுப்புகள் தானம்..!!

0 1080

இரு சக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனி கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

கம்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகனான பரத்குமார், கடந்த வெள்ளியன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், உடலுறுப்பு தானம் குறித்து பெற்றோரிடம் எடுத்துக் கூறினர்.

அவர்கள் சம்மதித்ததன் பேரில் மாணவனின் இருதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு முன்பதிவு செய்திருந்த மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments