ஹமாசிடம் சிக்கிய இஸ்ரேல் பெண்ணை விடுவிக்க குடும்பத்தினர் சுவரில் ஏறினர் நூதன செயல்

0 1362

ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ள இஸ்ரேல் பெண்மணி யார்டன் ரோமனை விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் நூதன செயலில்  ஈடுபட்டனர்.

50 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் படையினரிடம் சிக்கி குடும்பமாக கடத்தப்பட்டபோது பெண்ணின் கணவரும் குழந்தையும் நடுவழியில் தப்பினர். பின்னர் இருவரும் இஸ்ரேல் ராணுவத்தால் மீட்கப்பட்ட நிலையில், யார்டன் ரோமனின் கதி தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், யார்டன் ரோமன் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ளது.

மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்ட யார்டன் ரோமனின் விடுதலையை வலியுறுத்தும் வாசகம் கொண்ட பனியனை அணிந்தபடி, அவரது குடும்பத்தினர், செயற்கை மலையேற்ற சுவரில் ஏறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments