குஜராத்தில் வாயால் காலணியை எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்தியதாக பெண் தொழிலதிபர் மீது புகார்

0 1483

சம்பளம் கேட்ட ஊழியரிடம் தனது காலணியை வாயால் கவ்வி எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்திய புகாருக்குள்ளான பெண் தொழிலதிபர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரைச் சேர்ந்த விபூதி படேல் என்ற அந்த பெண் தொழிலதிபர், ஊழியர் நிலேஷ் என்பவரை திடீரென்று பணியில் இருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது சகோதரர் உள்ளிட்ட சிலருடன் விபூதி படேலின் அலுவலகத்துக்குச் சென்று, அக்டோபரில் தாம் பணியாற்றி 16 நாட்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்குதலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக விபூதி படேல் மற்றும் ஆறு பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் மோர்பி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments