ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் - இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

0 1947

ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள், வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.காங்கிரஸ் வேட்பாளரின் மரணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கரண்புர் தொகுதியைத் தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments