தெற்காசியாவில் முதன்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம்

0 868

தெற்காசியாவிலேயே முதன்முறையாக, சென்னை தீவு திடலில் அடுத்த மாதம் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பந்தய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அடுத்த மாதம் 9 மற்றும் 10-ஆம் தேதி நடைபெறும் கார் பந்தயத்திற்காக மூன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு பந்தய சாலை அமைக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தண்டையார்பேட்டையில் தொடங்கி வைத்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments