குழந்தை பொறந்துருக்கு 5000 ரூபாய் கொடுப்பா மல்லுக்கு நின்ற செவிலியர்..! அரசு மருத்துவமனையில் அட்ராசிட்டி

0 2310

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் கணவரிடம் பணம் கேட்டு செவிலியர் மல்லுக்கு நின்றதால் பரபரப்பு உண்டானது 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்
இவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்ப்பதற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு அவர் மனைவிக்கு நலமுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

உறவினர்கள் தகவலின்படி மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்கு சென்ற சரவணன்தனது பெண் குழந்தையை எடுத்து கொஞ்சியுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் அமுதா பிரசவம் பார்த்ததற்காக ரூ 5 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது சரவணன் தனது கையில் ரூபாய் 3000 மட்டுமே உள்ளது கூடுதலாக பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு செவிலியர் அமுதா சரவணன் மற்றும் அவரது உறவினர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை தானே ஏன் காசு கேட்கறீங்க ? என்று எதிர் கேள்வி கேட்டதால் காண்டான செவிலியர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு உண்டானது.

உடனடியாக சரவணன் தனது குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு மனைவியுடன் சென்று மணமேல்குடி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். சம்பவர் தொடர்பாக

மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments