பொலிவியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ 75 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் கருகின

0 649

பொலிவியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ள நிலையில், வெனிசூலா அரசு மேலும் 40 தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

கோடை வெயிலை முன்னிட்டு பல பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பொலிவியாவில் சுமார் 75 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மரங்கள் கருகி சாம்பலானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வானம் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நெருப்பு பரவுவதை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுக்கு போலீசார் உதவிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments