வேப்பம்பட்டு ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில் நிலையம் பயணிகளை எச்சரிக்கை செய்ய காவலரை நியமிக்க மாவட்ட ஆட்சியர் முடிவு

0 2370

கடந்த ஞாயிறன்று ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியில், தண்டவாளத்தை கடக்கும் பயணிகளை எச்சரிக்க 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாலம் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு தொடங்கப்பட்டு ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments