திருச்சியில் ரூபி ஜுவல்லரி என்ற நகைக்கடையில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை

0 1294

திருச்சியில் ரூபி ஜுவல்லரி என்ற நகைக்கடையில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கத்தை வாங்கி முறைகேடாக விற்பனை செய்வதாகவும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடப்பதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதே போன்று திருச்சி பெரியகடை வீதியில் உள்ள சக்ரா செயின் ஜுவல்லரி உள்ளிட்ட 3 நகைக் கடைகளிலும், அவற்றுக்கு தொடர்புள்ள இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை சவுக்கார்பேட்டை மோகன்லால் ஜுவல்லரியில் அமலாக்கத்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த 3 கடைகளில் ரெய்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments