பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாசுடன் போர்நிறுத்தம் மேற்கொள்வதாக வந்த தகவலை இஸ்ரேல் அரசு மறுப்பு

0 1116

பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாசுடன் போர்நிறுத்தம் மேற்கொள்வதாக வந்த தகவலை இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. ஹமாசிடம் சிக்கிய 240 பிணைக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இதில் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இஸ்ரேலும் அதனை ஆதரிக்கும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.

தவறான தகவல்கள் வெளியாகியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு கூறியுள்ளார். இதே போல் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரும் இன்னும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments