சேலத்தில், திருமணமான மறுநாளே புதுப்பெண் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை

0 2156

சேலத்தில், திருமணமான மறுநாளே புதுப்பெண் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த சுதாவிற்கு கடந்த 16-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

வெள்ளியன்று மாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி சுதாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு முன்பே மூச்சிறைப்பு பாதிப்பிற்காக சுதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்காக போடப்பட்ட மணப்பந்தலைக் கூட பிரிக்காத நிலையில் மணமகள் இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments