காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய யூடியூபர் கைது

0 2220

திருவள்ளூர் அருகே இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் யூட்யூபில் தமிழ் உங்களில் ஒருவன் என்ற youtube சேனலை பார்த்து  அதனை நடத்தி வரும் தமிழழகன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது நாளடைவில் காதலாக மாறி ,கடந்த இரண்டு வருடங்களாக தமிழழகன் இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து விட்டதால் சில நாட்களுக்கு தம்மை தொடர்பு கொள்ள வேண்டாம் என தமிழழகன் கூறியுள்ளார். இதையடுத்து இளம் பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, முகப்பேரை சேர்ந்த தமிழழகனை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments