அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் இரண்டு கால்கள் துண்டானது

0 2662

சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன் ஒருவரின் இரு கால்களும் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி துண்டாயின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொல்லச்சேரி நான்கு சாலையிலிருந்து அப்பேருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்ற போது இந்த விபரீதம் நேரிட்டது. 11 ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் மீது ஏறிய பேருந்து நிற்காமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

மாணவன் ரத்த வெள்ளத்தில் துடித்ததைக் கண்டதும் படியில் தொங்கிச்சென்ற சக மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். படுகாயம் அடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments