சேலத்தில் டெக்ஸ்டைல் பார்க் அமைய மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் காந்தி

0 675

மாநில அரசின் பங்களிப்புடன் விருதுநகரில் 1000 ஏக்கர் பரப்பில் 10,000 கோடி டாலர் மதிப்பில் நவீன மெகா டெக்ஸ்டைல்ஸ் பார்க் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி தொழில் துறை செயலர் ராஜீவ் சக்சேனா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் தமிழக அமைச்சர் காந்தி தலைமையில் தொடங்கிய இரண்டாவது தொழில்நுட்ப ஜவுளி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, சேலத்தில் 100 ஏக்கரில், 110 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகவுள்ள டெக்ஸ்டைல் பார்க்கிற்கு மத்திய அரசு நிதி வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments