மயிலாடுதுறையில் மகனை பள்ளியில் விட்டு வந்த பெண் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

0 6267

மயிலாடுதுறை தென்னைமர சாலையில், மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டியில் திரும்பிய தாய், லாரி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தில், பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கரூர் மாவட்டம் குன்னம் சத்திரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

குறுகிய தெருவிலிருந்து முக்கிய சாலையில் நுழையும் போது  ராஜேஸ்வரி கவனிக்காமல் அலட்சியமாக சென்றதும், ஹெல்மெட் அணியாமல் பயணித்ததும் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், உரிய ஓட்டுநர் உரிமம் இன்றியும் அவர் ஸ்கூட்டியை ஓட்டி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments