புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

0 2816

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மேல்மங்கலத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிமுத்து என்பவர், பெருங்காடில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

பள்ளியில் விளையாடி முடித்த பிறகு, வீட்டிற்கு செல்ல முயன்ற மாணவன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments