பஞ்சாப் - பீகார் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய பயணிகள்

0 1503

பஞ்சாபில் இருந்து பீகாருக்குச் செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் இருந்து பீகாரில் உள்ள சஹர்சா வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயிலுக்காக நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். அப்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் கோஷங்கனை எழுப்பினார்கள்

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ரயில் மீது பயணிகளில் சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments