ஹமாஸிடமிருந்து பிணைக்கைதிகளை விரைவில் விடுவிப்போம்- ஜோ பைடன்

0 956

ஹமாஸ் அமைப்பால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விரைவில் விடுவிப்போம் என்று உறுதியளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம்பிக்கையோடு காத்திருங்கள் நாங்கள் வருகிறோம் என்று பிணைக் கைதிகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

ஹமாஸ் தலைவர்களுடன் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எந்த ஒரு குறிப்பிட்ட விவரத்தையும் கூறாமல் செய்தியாளர்களிடம் பொதுவாக பேசிய ஜோ பைடன், உடன்பாடு எட்டப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஹமாஸிடம் சிக்கியுள்ள 240 பிணைக்கைதிகளில் 9 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments