ராஞ்சியில் இன்று 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 1280

ஜார்க்கண்ட மாநிலம் ராஞ்சியில் இன்று 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும் பகவான் பிர்ஸா முண்டா பிறந்த நாளை முன்னிட்டு பிர்சா முண்டா பிறந்த கிராமத்துக்கு சென்று அவருடைய திருவுருவ சிலைக்கு மலர்தூவி பிரதமர் மரியாதை செலுத்துகிறார்.

பிரதமர் விவசாயிகள் திட்டத்தின் கீழ் 5வது தவணையாக 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பிரதமர் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் இன்று செலுத்த உள்ளார்.

முன்னதாக நேற்று இரவு 10 கிலோமீட்டர் தூரத்துக்கு நடத்தப்பட்ட பிரம்மாண்டமான பேரணியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

சாலையின்இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை வரவேற்க பாரம்பரிய முறையில் நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.

பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் தொடங்கி அவர் பயணிக்கும் பாதை எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments