தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக 4 ஆயிரத்து 967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார்

0 3353

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக 4 ஆயிரத்து 967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 400 மாநில பேரிடர் மீட்பு படையினரும், 200 தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

நெற்பயிர்கள் சேதமடைந்தால் உடனடியாக நிவாரணம் வழங்க வேளாண்துறையோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments