மிசோரம் வழியாக இந்தியாவுக்குள் 2,000 மியான்மர் நாட்டினர் ஊடுருவல்

0 2297

மியான்மர் நாட்டில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக மிசோரம் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலை அடுத்து  இந்தியாவுக்குள் நுழைந்தவர்களில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, நாட்டில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments