உத்தரகாண்ட் முதல்வர் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு.... சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களின் நலம் விசாரித்தார்

0 1456

உத்தரகாண்ட் மாநிலம் சுரங்கப் பாதையின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்காக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மீட்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை மீட்க இன்னும் 2 நாட்கள் வரை ஆகலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசியில் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங்கை தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் நலன் குறித்து விசாரித்தார். அப்போது முதலமைச்சர், தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments