தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது தாக்குதல்

0 2240

சென்னையில், தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தியாகராய நகரில் வசித்து வரும் அமைச்சரின் மகன் ரமேஷ், தனது குடும்பத்தினருடன் ஏ.ஜி.எஸ் தியேட்டரில் நேற்றிரவு "ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படம் பார்த்துள்ளார்.

அப்போது, பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் விசிலடித்து ஆரவாரம் செய்யவே, தொந்தரவாக இருந்ததால் ரமேஷ் கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதில் ஏற்பட்ட தகராறில் அமைச்சரின் மகன் மற்றும் பெயரன் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தியேட்டர் நிர்வாகம் சமாதானம் பேசிய போது தாக்கிய கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த ரமேஷ், அவரது மகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments