ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்காக ரூ 85 கோடி நிதி திரட்டிய காவல் அதிகாரி, தொழிலதிபர் உள்பட 22 பேரின் வீடுகளில் சோதனை

0 1692

தீவிரவாதிகளுக்காக 85 கோடி ரூபாய் நிதித்திரட்டியது தொடர்பான புகாரில் ஜம்மு காஷ்மீரில் மூத்த காவல்துறை அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 22 பேரின் வீடுகளில் மாநில புலனாய்வுப் போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த 3 நாட்களாக இந்த சோதனைகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள் மூலமாக தீவிரவாதிகளுக்கு நிதி அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சோதனைகளின் போது ஏராளமான டிஜிட்டல் சாதனங்களும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தீவிரவாதிகளின் எல்லைத் தாண்டிய தொடர்புகள், துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments