இந்துக்களிடமிருந்து சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று திரைப்படப் பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான ஜாவேத் அக்தர் கருத்து

0 1851

இந்துக்களிடமிருந்து சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று திரைப்படப் பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாவேத் அக்தர், சிலர் சகிப்புத்தன்மையே இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றார். ஆனால் இந்துக்கள் அப்படி இல்லை என்று அவர் கூறினார்.

பரந்த மனப்பான்மை மற்றும் தாராள மனம் கொண்ட இந்துக்களின் நற்குணங்களுக்கு முடிவு கட்டி விடாதீர்கள் என்று இதர சமூகத்தினரிடம் ஜவேத் அக்தர் கேட்டுக் கொண்டார்.

  இந்நாட்டில் ஜனநாயகம் தழைத்து நீடிக்க இந்து கலாச்சாரம்தான் காரணம் என்றும் அவர் பேசினார்.தான் சொல்வது தான் சரி மற்றவர்கள் கூறுவதெல்லாம் தவறு என்ற மனப்பான்மைதான் தவறானது என்றும் ஜாவேத் அக்தர் வலியுறுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments