சென்னை கொத்தவால்சாவடி வீரபத்ர சுவாமி கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு போதை ஆசாமி கைது

0 2819

சென்னை கொத்தவால் சாவடி வீரபத்ர சுவாமி கோயிலின் கர்ப்பகிரத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கோயிலுக்குள் காலை 8.45 மணியளவில் செருப்புக் காலுடன் நுழைந்த அந்நபர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கையில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பற்ற வைத்து வீசியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு கோயிலுக்குள் வந்த போக்குவரத்து போலீசார் அவனை பிடித்தனர்.

விசாரணையில், பெட்ரோல் குண்டை வீசிய நபர் கோயிலுக்கு அருகில் பழக்கடை வைத்திருக்கும் முரளிகிருஷ்ணா என்பதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

4 ஆண்டுகளாக வழிபட்டும் சாமி தனக்கு எதுவுமே செய்யவில்லை என்பதால் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறிய முரளிகிருஷ்ணா மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதித்துறையின் கீழ் செயல்படும் கோயில் என்பதால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக, டீக்கடை ஒன்றில் அமர்ந்து பலர் முன்னிலையில் முரளிகிருஷ்ணா பீர் பாட்டிலில் ஊற்றி பெட்ரோல் குண்டை தயார் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments