திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது

0 1737

திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பேருந்து நிலையம், பாண்டியன் நகர் , குமரன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பி, சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள்  சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments