நியூயார்க்கில் வாடகை தராமல் பாக்கி வைத்த விவகாரம்-வீட்டுக்குத் தீ வைத்த உரிமையாளர் கைது

0 1141

வாடகை பாக்கி விவகாரத்தால் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த வீட்டு உரிமையாளரை நியுயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் தீ பரவிய போதும் தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 66 வயதான ரபீக் இஸ்லாம் என்பவர் புரூக்ளினில் தனக்கு சொந்தமான கட்டடத்தைத் தீ வைத்தார்.

அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் 8 பேர் குடியிருந்தனர்.வாடகை பாக்கி வைத்திருந்ததால் ரபீக் ஆத்திரம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.வீட்டை காலிபண்ண வலியுறுத்தியும் குடியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்ததால் அவர் வீட்டுக்குத் தீ வைத்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments