துபாயில் நடக்கும் விமானக் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் தேஜஸ் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் பங்கேற்ப்பு

0 1194

துபாயில் நடக்கும் விமானக் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் தேஜஸ் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் பங்கேற்க உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விமானக் கண்காட்சி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க இந்திய விமானப்படை குழு ஒன்று துபாய் சென்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக விமானமான தேஜசும், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் துருவும் பங்கேற்க உள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான சாகச நிகழ்ச்சிகளில் சாரங் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய விமானப்படையின் தரத்தை உலகறிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments