நவ.9 முதல் 11 வரை தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்காது - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

0 10821

நாளை முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் நசரத்பேட்டை வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலைவழியே செல்லும் பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கான வரையறுக்கப்பட்ட கட்டணம் சங்கத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க அளிக்க செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments