கொலம்பியாவில் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை 2026ம் ஆண்டுக்குள் மீட்க நடவடிக்கை

0 1418

கொலம்பியாவில் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சான் ஜோஸ் என்ற அந்தக் கப்பல் கடந்த ஆயிரத்து 708 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கடற்படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

அப்போது அந்தக் கப்பலில் 200 டன் மரகதங்கள், வெள்ளி மற்றும் 11 மில்லியன் தங்க நாணயங்கள் அடங்கிய, பெரிய அளவிலான புதையல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 அடிக்கு கீழே கிடக்கும் சான் ஜோஸ் கப்பலை 2026ம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பிய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments