வீட்டில் லீசுக்கு குடியிருந்தவரை பூட்டி வைத்து துன்புறுத்தியாக நடிகர் பிரபு தேவாவின் சகோதரர் மீது போலீசில் புகார்

0 5952

பிரபல நடிகர் பிரபு தேவாவின் சகோதரர் அவரது வீட்டில் லீசுக்கு குடியிருந்தவரை பூட்டி வைத்து வீட்டுக்கு வெல்டிங் செய்து துன்புறுத்தியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் வீடுகாலியாக இருந்த போது விக்னேஷ் என்பவர் வாடகைக்கு வந்துள்ளார்.

அவரிடம் எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்துக்கு வீட்டை லீசுக்கு விட்டு இருப்பதால் அவர்களிடம் 25 லட்சம் ரூபாய் கொடுத்து விடுமாறும் அவர்கள் மாதம் தோறும் 36 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வாடகை செலுத்தி விடுவார்கள் என்றும் நாகேந்திர பிரசாத் மனைவி கூற , விக்னேஷ் குடியேறியுள்ளார்.

ஒரு வருடம் மட்டும் வாடகை கொடுத்த எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் நிறுவனத்தினர் பின்னர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டு வாடகை தரவில்லை என கூறி நாகேந்திரபிரசாத் ஆட்கள் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்து சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய விக்னேஷ் வீடு வெல்டிங் வைத்து பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். செல்லப்பிராணியை வீட்டிற்குள் வைத்து பூட்டி சீல் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

வாடகைதாரர் விக்னேஷை ஏமாற்றியது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments