சத்தீஸ்கர், மிசோரமில் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

0 1272

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 8 லட்சத்து 57 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

மேலும் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, எதிர்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க. என மிசோரமில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments