அய்யா.. பொண்ணு இருந்தா தாங்கய்யா... புள்ளைய பெத்த புண்ணியவதிகளே.. முரட்டு சிங்கிள்ஸ் பாதயாத்திரை..! 90 கிட்ஸ் திருமண சோகங்கள்..!

0 3689

விவசாயம் பார்ப்பதால் எவரும் பெண் தர முன்வருவதில்லை என்றும் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் தர வேண்டும் என்றும் வேண்டி மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு சாம்ராஜ் நகர் இளைஞர்கள் பாதயாத்திரையாக சென்றனர்..

இவர்களுக்கு பெண் கொடுக்க எவரும் முன்வராததால் கையில் தட்டை ஏந்திக் கொண்டு பாதயாத்திரையாக கிளம்பி விட்டார்கள் இந்த கன்னடிகா 90 கிட்ஸ்..!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை என்று கூறப்படுகின்றது. விவசாயி என்பதால் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க, பெற்றோர் தயக்கம் காட்டுவதால் அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் 30 வயதை கடந்து திருமணமாகாமல் முரட்டு சிங்கிள்களாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 160 கிலோ மீட்டர் தூரத்தில், மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

திருமணத்திற்கு நல்ல பெண் தேடிய காலம் எல்லாம் தள்ளிப்போனதால், தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைத்தால் போதும் என்றும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாதயாத்திரை செல்வதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். சனிக்கிழமை கிராமத்தில் இருந்து துவங்கிய இளைஞர்களின் பாதயாத்திரை செவ்வாய் கிழமை மாதேஸ்வரன் மலையில் நிறைவு பெறுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments