ஆர்.எஸ். பாரதியை போலீசார் கைது செய்ய வேண்டும் : அண்ணாமலை

0 2452

நாகாலாந்து மக்கள் குறித்து தெரிவித்த கருத்துக்காக ஆர்.எஸ். பாரதியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி திருவரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் பேட்டியளித்த அவர், ஆர்.எஸ். பாரதி மீது நாகலாந்தில் யாராவது ஒருவர் புகார் கொடுத்தால்கூட ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது செய்து அம்மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என கூறியுள்ளார்.

பா.ஜ.க.வினரை கைது செய்யும் நோக்கிலேயே தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பதற்கு பதில் நடுநிலை தவறி போலீசார் பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments